அந்த குழந்தை
அப்பாவிடம் கூறியது
அதற்கு ஏன்
மீசை வளரவில்லை
என்று.
அப்பா அதனிடம்
கேலியாக
மூன்றில்
எங்கு மீசை
என்று.
அப்பாவை கேட்ட
அப்பாவிக் குழந்தை
தன் செல்லப் பூனையிடம்
கேள்வியாக இரண்டில்
உனக்கு மட்டும்
எப்படி மீசை
என்றது.
திடீரென பூனையின்
மீசையிலேறிய
கௌரவத்தில்
அப்பாவின் தோரணை
அதன் உறுமலில்
உருவம் கொண்டது.