வணக்கம். நான் இங்கு பதிவு செய்து பல நாட்கள் ஆகிவிட்டன. எனது படிப்பு முதலிய கடமைகளை செய்வதற்குள் என்னால் இங்கு என் படைப்புகளை வெளியிட இயலவில்லை. மெதுவாக இந்த வலைப்பூவில் எனது இலக்கிய முயற்சிகளை பதிவு செய்ய முயற்சி செய்வேன். இங்கு இந்த கவிதையோட தொடங்குகிறேன்…
நிழல் தந்த மரம் | திண்ணையில் வெளியான கவிதை
ஆல மரம் எப்படி இருக்கும்
என்று சிறுவன் தன்
தந்தையிடம் கேட்டான்.
வீட்டிற்கருகில் மரமொன்றும்
இல்லாததால் கூகுளிலிருந்த
மரமொன்றை கொண்டு வந்து
கணினித் திரையில் நட்டார்
சிறுவனின் தந்தை.
கணினி திரையினுள் அந்த
மரத்தின் நிழலும் பரந்து
இருந்தது..
களைப்பாகும் நேரமெல்லாம்
அந்த விழுதுகளில்
தொங்கிக் கொண்டே
இளைப்பாறுகிறான்
அந்த சிறுவன்…